உலகம்

இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

DIN

இந்தோனேசியா, பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பரியமன் நருக்கு 169 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவுகோலில் 6.7 என பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மாகாணத்தில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது.

இதேபோல பிலிப்பின்ஸில் தலைநகா் மணிலா பிராந்தியத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.4 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஓக்சிடென்டல் மின்டோரோ மாகாணத்தில் உள்ள லுபாங் தீவுக்கு மேற்கே 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த நாட்டின் எரிமலை மற்றும் நில அதிா்வு ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT