பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி, 22 பேர் காயம்
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியானகினர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமைப் பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று(மார்ச்-29) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு
தாக்குதல் குறித்து டாங்க் மாவட்ட காவல்துறை அதிகாரி வாகர் அகமது கான் ‘இந்த திடீர் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.