உலகம்

இலங்கையில் தெருவிளக்குகளை அணைக்க முடிவு

DIN

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தெருவிளக்குகளை அணைக்க முடிவு செய்திருப்பதாக  மின்சாரத்  துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

இலங்கையில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டில் பெரும்பாலும் நீா்மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது மழை குறைவாக பெய்ததால் நீா் மின்நிலையங்கல் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளன.

அனல் மின்சாரத்துக்குத் தேவையான எரிபொருள்களுக்கு இலங்கை இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களிலிருந்தும் போதிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக, நேற்று புதன்கிழமை முதல் நாடு முழுவதும் 10 மணி நேர மின்வெட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கையிருப்பில் இருக்கும் எரிபொருளை சேமிக்கும் பொருட்டும் மின் தடையைக் குறைப்பதற்கும் இரவு நேரங்களில் எரியும் தெருவிளக்குகளை அணைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என மின்சாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் 10 மணி நேர மின்வெட்டு 13 மணி நேரம் வரை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

SCROLL FOR NEXT