டிவிட்டரில் அரசு மற்றும் வணிக பயனர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்: எலான் மஸ்க்
டிவிட்டரைப் பயன்படுத்தும் அரசு மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரைப் பயன்படுத்தும் அரசு மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் டிவிட்டரின் செயல்பாடுகள் சிலவற்றை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பில், சாதாரண பயனர்கள் எப்போதும்போல் டிவிட்டரைப் பயன்படுத்தலாம் என்றும் அரசு மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.