ஆப்கனில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | இலங்கையில் மீண்டும் அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு கண்டனம்
Advertisement
Advertisement
அதன் ஒருபகுதியாக ஆப்கனில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் எனவும் இந்த உத்தரவு கட்டாயமாக்கப்படுவதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலிபான் அரசின் தலைவர் ஹைபதுல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில் பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
அரசின் இந்த உத்தரவை பின்பற்றாத பெண்களின் கணவர் அல்லது தந்தை உள்ளிட்ட நெருங்கிய ஆண் உறவினரின் அரசுப் பணி பறிக்கப்படும் அல்லது சிறையிலடைக்கப்படுவார் எனவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கன் பெண்கள் ஆண்களின் துணையின்றி பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய அறிவிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.