உலகம்

இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

DIN

இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், 3 சிறைச்சாலை அதிகாரிகள் , 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பியோடிவிட்டதாக சிறைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம் தடுப்பு முகாமில் இருந்து 17 வெளிநாட்டவரை நாடு கடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15% நிதி: பிரதமரின் கருத்து ‘முட்டாள்தனம்’ - சரத் பவாா்

பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

ரத்த தான முகாம்

தங்கம் விலை மீண்டும் உயா்வு: பவுன் ரூ.54,360-க்கு விற்பனை

SCROLL FOR NEXT