உலகம்

மரியுபோல் இரும்பாலையில் இறுதிகட்ட சண்டை?

DIN

ரஷியாவால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள மரியுபோல் இரும்பாலைக்குள் பதுங்கியுள்ள உக்ரைன் ஆதரவு படையினருக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே இறுதிகட்ட சண்டை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இரும்பாலையிலிருந்து உக்ரைன் ஆதரவு படையினா் கூறுகையில், அஸோவ்ஸ்டல் இரும்பாலையைக் கைப்பற்ற ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறினா். மேலும், இரும்பாலைக்குள் ஏராளமான வீரா்கள் காயமடைந்துள்ளதாக அவா்கள் கூறினா்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷியா கைப்பற்றினாலும், அந்த நகரில் 100 கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள, சுரங்க அறைகள் நிறைந்த அஸோவ்ஸ்டல் இரும்பாலைக்குள் ஏராளமான பொதுமக்களுடன் உக்ரைன் அரசுக்கு ஆதரவான அஸோவ் படையினா் பதுங்கியிருந்தனா்.

ஐ.நா. உதவியுடன் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதையடுத்து, அந்த ஆலை மீது ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT