முகப்பு
உலகம்

இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு: நிலைமை சரியாகுமா?

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
ரணில் விக்ரமசிங்க 
பகிர்:

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை அவா் சனிக்கிழமை நியமனம் செய்தார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேலும் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.