முகப்பு
உலகம்

நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 29 மே, 2022 at 4:40 PM
பகிர்:

நேபாளத்தில் 22 பேருடன் சென்றபோது காணாமல் போன விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலை நகரமான ஜோம்சோமுக்கு புறப்பட்ட விமானம், மஸ்டாங் மாவட்டத்தில் கோவாங் கிராமத்தில் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம், நேபாள மலைகளில் இன்று மாயமானது. விமானம் குறித்த தகவல்கள் கிடைக்காததால், தேடுதல் பணி நடைபெற்று வந்தது. 

Advertisement

இந்நிலையில் கோவாங் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரியவிலை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விமானத்தைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.