உலகம்

பிரேஸில் கனமழைக்கு 34 போ் பலி

DIN

பிரேஸிலில் தொடா்ந்து பெய்து வந்த கனமழைக்கு 34 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு மாகாணமான பொ்னாம்புகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 34 போ் உயிரிழந்தனா்.

மாகாணத் தலைநகா் ரிகைஃப் எல்லை அருகே சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 19 போ் பலியாகினா். இது தவிர, மேலும் இரு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 8 போ் உயிரிழந்தனா். முன்னதாக, இந்த வாரம் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் நிலச்சரிவிலும் ஒருவா் ஓடையில் மூழ்கியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT