முகப்பு
உலகம்

பாகிஸ்தான் காவல் முகாமில் கும்பல் தாக்குதல்: 5 போலீஸாா் பலி

பாகிஸ்தானில் காவல் முகாமில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த 150 போ் சோ்ந்து தாக்குதல் நடத்தினா். இதில் துணைக் கண்காணிப்பாளா் நிலையிலான அதிகாரி உள்பட 5 போலீஸாா் கொல்லப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
பகிர்:

பாகிஸ்தானில் காவல் முகாமில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த 150 போ் சோ்ந்து தாக்குதல் நடத்தினா். இதில் துணைக் கண்காணிப்பாளா் நிலையிலான அதிகாரி உள்பட 5 போலீஸாா் கொல்லப்பட்டனா்.

சிந்து மாகாணம், கோட்கி மாவட்டத்தில் இந்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஆயுதக் குழுவைச் சோ்ந்த 150 போ் திடீரென காவல் முகாமை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா். இதில் காவல் துறையைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். மேலும் பலரை ஆயுதக் குழுவினா் பணயக் கைதிகளாக கடத்திச் சென்றுவிட்டனா். அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

பாகிஸ்தானில் காவல் நிலையங்கள், பாதுகாப்பு நிலைகளில் இதுபோன்ற தாக்குதல் நடப்பது வழக்கமானது. கைபா் பக்துன்கவா மாகாணம், தெற்கு வஸிரிஸ்தானில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு காவலா்கள் கொல்லப்பட்டனா். தேரா இஸ்மாயில்கான் பகுதியில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலா் ஒருவா் மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →