கொரிய தீபகற்பம் அருகே அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு ஏவுகணைகளை வட கொரியா வியாழக்கிழமை ஏவி சோதித்தது.
முன்னதாக, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்கச் செய்து கடலில் செலுத்தி வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கொரிய தீபகற்பம் அருகே நிறுத்தியது.