கோப்புப்படம் 
உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

DIN

வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து அந்நாடு மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. 

கடந்த சனிக்கிழமை 2 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதித்த வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் மக்களை பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளன. 

350 கி.மீ தூரம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணையும், 800 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2 வாரங்களில் வடகொரியா மேற்கொண்ட 6ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு ஆக. 24 வரை காவல் நீட்டிப்பு

ஆசிய கோப்பை: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

ஏலச் சீட்டு நடத்தி ரூ. 10 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT