முகப்பு
உலகம்

ஈரான் போராட்டம்: குா்து பகுதியில் தீவிரமானது அரசின் அடக்குமுறை

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது குா்து பெண், காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து குா்து மாகாணத் தலைநகா் சனந்தாஜில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது குா்து பெண், காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து குா்து மாகாணத் தலைநகா் சனந்தாஜில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினா்.

இது குறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது: சனந்தாஜில் போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இது தவிர, அந்தப் பகுதியில் ஏராளமான கலவரத் தடுப்பு போலீஸாா் குவிக்கப்பட்டு, ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்று தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த போராட்டத்தில் சில எண்ணெய் நிறுவன தொழிலாளா்களும் திங்கள்கிழமை இணைந்துகொண்டனா். 4 வாரங்களுக்கு மேல் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், ஈரானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் துறை தொழிலாளா்கள் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமையும் அதனைத் தொடா்ந்து புதன்கிழமையும் (அக். 12) போராட்டம் நடத்த எண்ணெய் நிறுவனத் தொழிலாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

ஈரான் விதிமுறைகளின் படி தலையை மறைக்கும் ஹிஜாபை சரியான முறையில் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கலாசார காவலா்களால் மாஷா அமீனி கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடா்ந்து நாட்டின் ஆடைக்கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 4-ஆவது வாரமாக போராடடங்கள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →