கோப்புப்படம் 
உலகம்

விரைவில் கார்பன் வெளியீடு உச்சநிலையை அடையும்: ஆய்வறிக்கையில் தகவல்

2025ஆம் ஆண்டில் கார்பன் வெளியீடு உச்சத்தை அடையும் என சர்வதேச ஆற்றல் நிறுவனம் கணித்துள்ளது. 

DIN

2025ஆம் ஆண்டில் கார்பன் வெளியீடு உச்சத்தை அடையும் என சர்வதேச ஆற்றல் நிறுவனம் கணித்துள்ளது. 

கார்பன் வாயு வெளியீடு காலநிலை மாற்றத்தின் அடிப்படை காரணமாக இருந்து வருகிறது. இதன்காரணமாக முன்பு இருந்ததைக் காட்டிலும் பருவநிலை சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து புதிய ஆற்றல் மூலங்களுக்கு உலக நாடுகள் மாற வேண்டும் என சர்வதேச சூழலியல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் வெளியீடு உச்சநிலையை அடையும் என சமீபத்தில் வெளியான ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஆற்றல் நிறுவனம் உலகளாவிய ஆற்றல் பகுப்பாய்வு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் அடுத்த சில ஆண்டுகளில் நிலக்கரி பயன்பாட்டிற்கு அதீத தேவை ஏற்படும் எனவும், இதனால் 2025ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இதுவரை இல்லாத அளவு உச்சநிலையை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகப்படியான ஆற்றல் தேவைகள் காரணமாக நுகர்வோர்களின் செல்வமானது ஆற்றல் உற்பத்தியாளர்களிடம் சென்று சேர இது வழிவகை செய்யும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“புதிய ஆற்றல் மூலங்களை பெறுவதில் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள உள்ளதாகவும், 7.5 கோடி மக்கள் தங்களுக்கு தேவையான மின்வசதி உள்ளிட்ட ஆற்றல் தேவைகளைப் பெறுவதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாகவும், 10 கோடி மக்கள் விறகடுப்புகள் மூலம் சமையல் செய்வதற்கான நிர்பந்தத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT