உலகம்

ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு: 13 லட்சம் பேருக்கு கரோனா சோதனை

DIN

கரோனா பரவல் காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடும் விமா்சனங்களுக்கு மத்தியிலும், கரோனா தொற்று பரவலே இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. இதனால் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தாலும் கட்டாய கரோனா பரிசோதனை, கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கடைப்பிடிக்கிறது.

இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷாங்காயின் யாங்பு உள்பட பல்வேறு நகரங்களில் சுமார் 13 லட்சம் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவின் வூகான் உள்பட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT