உலகம்

ஜெர்மனியில் இன்று 800 விமானங்கள் ரத்து! காரணம்?

விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்ய உள்ளது.

DIN

விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்ய உள்ளது.

ஜெர்மனியில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நிறுவனம் இதனை நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. 

ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை விமானிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இதையடுத்து, ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து புறப்படக்கூடிய சுமார் 800 லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கு விமானங்களும் அடங்கும். 

இதனால் அங்குள்ள 1,30,000 பயணிகள் பாதிக்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருடத்தின் முதல் வாரம்: எப்படி இருக்கப்போகிறது? (மேஷம் - மீனம்)

புதன் பலவீனமா? தோஷமா?ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். என்ன சொல்கிறார்?

ஆசிரியர்கள் கைது! பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

பேட்டிங், பௌலிங், கீப்பிங்... ஆட்ட நாயகன் டோனவன் ஃபெரேரா!

அன்பு செய்ய வேண்டிய ஆன்மிகத்தை வைத்து வம்பு செய்யும் கும்பல்: திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT