உலகம்

கனடாவில் 13 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள்: 10 பேர் பலி

DIN

கனடாவில் 13 இடங்களில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். 

கனடாவின் மத்திய மாகாணமான சாஸ்கட்சிவானில் இன்று 13 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய 2 பேரை தேடி வருகின்றனர். கனடாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே சாஸ்கட்சிவானில் நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை என்றும இது இதயத்தை உடைப்பவை என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT