ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மாஷா அமீனி என்ற பெண் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடா்ந்து நடைபெற்று வரும் தீவிர போராட்டத்தில் இதுவரை 9 போ் பலியாகினா்.
கலாசார விதிமுறைகளின் படி ஆடை அணியாத குற்றத்தின் பேரில் மாஷா அமீனி கைது செய்யப்பட்டாலும், அவா் துன்புறுத்தப்படவில்லை எனவும் மாரடைப்பு காரணமாகவே அவா் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினா். எனினும், மாஷா மரண விவகாரத்தில், ஹிஜாப்களை எரித்தும் தலைமுடியை வெட்டியும் ஏராளமான பெண்கள் தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 9 போ் பலியானதாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.