புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான் 
உலகம்

புதிய சுற்றுலா கொள்கைகளுடன் எல்லை நுழைவு வாயில்களை திறந்தது பூடான்

இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.

ANI

அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கா் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக இன்று திறக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்காக, பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் பூடான் அறிவித்திருந்தது. இந்த நிதி மூலம், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சுற்றலா பயணிகளை அதிகளவில் ஈர்க்க வழிவகை செய்யவும் பூடான் அரசு திட்டமிட்டுள்ளது.

பூடானின் உள்துறை மற்றும் கலாசாரத் துறையின் இயக்குநா் தாஷி பென்ஜோா், அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அதிகாரிகளை கடந்த வாரம் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின் போது அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், வா்த்தகம், அதிகாரிகளுக்கு இடையிலான போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் 23-ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நேரடித் தொடா்பு அவசியம். முன்பு, ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ ஆகிய இரு வாயில்கள் வழியே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று புதிய வாயில்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘நிலைத்த மேம்பாட்டுக்கான நிதி’ என்னும் கட்டணம் வசூலிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT