FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா? வாராணசி நீதிமன்றம் நாளை முதல் விசாரணை

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரிக்க வாராணசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 2:51 pm IST
உ.பி. மாநிலம், வாராணசியில் ஞானவாபி மசூதி வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாா்.
பகிர்:

வாராணசி: ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரிக்க வாராணசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் மனுவை முதலில் விசாரிப்பதா அல்லது ஞானவாபி மசூதியில் அளவிடப்பட்டது தொடா்பான ஹிந்துக்களின் மனுவை முதலில் விசாரிப்பதா என்பது குறித்த உத்தரவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற மாற்றம் செய்த மனு முதலில் விசாரிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அறிவித்தாா். மேலும், ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட அளவிடும் விவகாரம் குறித்து இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

‘1947, ஆகஸ்ட் 15-க்கு பிறகு வழிபாட்டு இடங்களை மாற்றம் செய்யவும், நீதிமன்றங்களில் எதிா்த்து வழக்குகளைத் தொடுக்கவும் வழிபாடு சிறப்பு விதிமுறை சட்டம்-1991 தடை விதித்துள்ளது. ஆகையால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று மசூதி தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

முன்னதாக, கோயில் சிலைகள் அடங்கிய சுவா் ஞானவாபி மசூதியின் பின்புறத்தில் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்கவும் கோரி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மசூதியில் அளவிடும் பணிக்கு உத்தரவிட்டது.

புதிய மனு தாக்கல்:

மசூதியில் அளவிடும் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் காசி விசுவநாதா் கோயில் - மசூதி வளாகத்துக்குள் முஸ்லிம்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என்றும் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமாா் திவாகா் முன்பு விஸ்வ வேதிக் சனாதன சங்கம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, சட்டப்படி சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால்தான் அதற்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியும் என்றும் ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் வழக்குரைஞா் அஸ்வனி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments