உலகம்

சீனா: சுரங்க விபத்தில் 12 போ் மரணம்

DIN

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் ஏற்பட்டு வந்தது. எனினும், சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது.

அதிலிருந்து சுரங்க விபத்து உயிரிழப்புகள் குறைந்தாலும், அத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

SCROLL FOR NEXT