உலகம்

வடகொரியா: 2024-க்கான அதிரடி இலக்குகள்!

DIN

சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், 2024 ஆம் ஆண்டில் வட கொரியாவின் இலக்குகள் குறித்து பேசியுள்ளார்.

வட கொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகளைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன், வட கொரியா, மூன்று கூடுதல் உளவு செயற்கைகோள்களை வருகிற ஆண்டு ஏவ இருப்பதாகவும் அணு ஆயுதங்களையும் ஆளில்லாத ராணுவ தளவாடங்களைக் கட்டமைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான மோதல் நகர்வுகளை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்நிலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சி மாநாடு | AP

அரசியல் கவனிப்பாளர்கள், கிம் தனது ஆயுத பரிசோதனைகளை நிறுத்துவதன் மூலமாகவும் அணுஆயுத நீக்கத்துக்கு உடன்படுவதன் மூலமாகவும் ஐநாவின் பொருளாதார தடையில் இருந்து மீளலாம். கிம்முக்கு அந்த எண்ணமில்லை எனத் தெரிவிக்கிறார்கள்.

சனிக்கிழமை, முடிவு பெற்ற 5 நாள்களுக்கான கட்சிக் கூட்டத்தில் கிம், அமெரிக்கா மற்றும் அதன் பின்தொடரும் நாடுகள் வட கொரியா மீது இந்தாண்டு நிகழ்த்தியது எதிர்பாராதது எனவும் இந்த நடவடிக்கைகள் தான் வடகொரியாவை அணு ஆயுதம் நோக்கி செலுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  “மிக மோசமான இந்த நிலை என்பது போரை எதிர்கொள்ள நமது முழு திறனையும் தயார் செய்யக் கோருகிறது. நேர்த்தியான ராணுவ தயார்நிலை எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நிகழ்ந்தாலும் அதனை  ஒடுக்க போதுமானதாக இருக்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT