கோப்புப் படம். 
உலகம்

லிபியாவில் இருந்து துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது. 

DIN

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து லிபிய அதிகாரி ஜிப்ரில் ஷ்டெவி, கூறியதாவது, நாங்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மருத்துவ, அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களை விமானங்களில் அனுப்பியுள்ளோம். லிபிய குழுக்கள் இதுவரை 27 பேரை காப்பாற்றியுள்ளன, 53 உடல்களை மீட்டுள்ளன. 

அதோடு தெற்கு துருக்கியில் 400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் லிபிய அரசு, 55 மீட்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நான்கு துப்பறியும் நாய்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 30,000 க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT