கோப்புப் படம். 
உலகம்

லிபியாவில் இருந்து துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது. 

DIN

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை லிபியா அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து லிபிய அதிகாரி ஜிப்ரில் ஷ்டெவி, கூறியதாவது, நாங்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மருத்துவ, அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களை விமானங்களில் அனுப்பியுள்ளோம். லிபிய குழுக்கள் இதுவரை 27 பேரை காப்பாற்றியுள்ளன, 53 உடல்களை மீட்டுள்ளன. 

அதோடு தெற்கு துருக்கியில் 400 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் லிபிய அரசு, 55 மீட்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் நான்கு துப்பறியும் நாய்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 30,000 க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT