உலகம்

கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்ச

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார். 

DIN

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்தியா-இலங்கை பரஸ்பர உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

கடந்த ஆண்டின் தொடக்கம் முதலே இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனையடுத்து, மக்கள் அனைவரும் அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர். தனது சகோதரர் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்ததால் கடந்த மே மாதம் மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யம் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT