இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 37 கிமீ தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.24 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 39 பேர் பலி!
இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.24 மணியளவில் 4.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின். அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.
இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 37 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக என்சிஎஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.