உலகம்

தென் கொரியாவில் நீடிக்கும் கனமழை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

தென் கொரியாவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

தென் கொரியாவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கனமழைக்கு 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். பலரும்  அவர்களது இருப்பிடத்தில் இருந்து பத்திரமான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: கிட்டத்தட்ட 400 மீட்புப் படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் 15-க்கும் அதிகமான வாகனங்கள் நீருடன் அடித்து செல்லப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த வாகனத்தில் இருந்து 6 உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சுரங்கத்தில் வாகனங்களில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சுரங்கப் பாதையில் எத்தனை பயணிகள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதுவரை 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றனர்.

தென் கொரியாவில் கடந்த ஜூலை 9  ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

Arasan அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்! | Mask audio launch

புதிய முயற்சியில் வெற்றி வாகை சூடும் கடக ராசிக்காரர்கள்!

கடவுள் ஒரு விதி எழுதினால், மக்கள் வேறு எழுதுகின்றனர்: பிக் பாஸ் பிரவீன்

SCROLL FOR NEXT