சீன உணவகத்தில் வெடிவிபத்து: 31 போ் பலி
சீன உணவகத்தில் சமையல் எரிவாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.
சீன உணவகத்தில் சமையல் எரிவாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
யின்சுவான் மாகாணம், ஜிங்கிங் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் புதன்கிழமை இரவு 8.40 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
எல்பிஜி சமையல் ஏரிவாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதில், 31 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடா்பாக, உணவக உரிமையாளா் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வியாழக்கிழமை தொடங்கிய டிராகன் படகுத் திருவிழாவையொட்டி அந்த உணவகத்தில் அதிக கூட்டம் இருந்தது.
அப்போது வெடி விபத்து ஏற்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.