கோப்புப்படம் 
உலகம்

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதல்: 14 பேர் பலி, 25 பேர் காயம்!

தென்மேற்கு எகிப்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

DIN

தென்மேற்கு எகிப்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் புதன்கிழமை பிற்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றதாக, மாகாண ஆளுநர் மொஹமட் எல்-ஜமூத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்தார். 

சம்பவ இடத்துக்கு 17 ஆம்புலன்ஸ்கள் வந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

45 பேருடன் தலைநகர் கெய்ரோ நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்த டிரக்கின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

எகிப்தில் மோசமான போக்குவரத்து சாலைகள் உள்ள நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

SCROLL FOR NEXT