முகப்பு
உலகம்

சார்லஸ் முடிசூட்டு விழாவின் பத்து சிறப்பு அம்சங்கள்!

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:


லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். 

கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டன் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெர்(96) மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக்கொண்ட சார்லஸ், அரசவை சட்டத்தையும் பிரிட்டன் திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து தங்க முலாம் பூசப்பட்ட அரியணையில் அமரவைக்கப்பட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். அவரது கையில் செங்கோலும் வழங்கப்பட்டது. 

Advertisement

பிரிட்டன் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெர்(96) மறைவைக்குப் பிறகு, மூன்றாம் சார்லஸ் சனிக்கிழமை பிரிட்டன் மற்றும் 14 பிற காமன்வெல்த் நாடுகளின் மன்னராக முடிசூட்டப்பட்டார். உடனடியாக அவரது மனைவி கமீலா பிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டார்.

* 1937 மற்றும் 1953-க்குப் பிறகு நடைபெற்ற ஒரு மன்னரின் முதல் முடிசூட்டு விழாவாகும்.  பிரிட்டன் வயதான மன்னராக பதவியேற்ற முதல் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

* 2,300 பேர் பங்கேற்ற வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் "கடவுளே மன்னரை காப்பாற்று" என்ற முழக்கங்கள் முழங்கின, மேலும் அவர் பதவியேற்றதை மத ரீதியாக உறுதிப்படுத்தியதன் உச்சக்கட்டத்தில் ஆரவாரங்கள் ஒலித்தது.

* வெளியே, நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஆலய மணி சத்தங்கள், டிரம்ஸ்கள் முழங்க கொண்டாட்டப்பட்டது.

* சார்லஸை " மக்களின் மன்னர்" என்று அங்கீகரிப்பதற்காக பல சிக்கலான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருந்தபோதிலும், மன்னரை சேவையின் பிற அம்சங்களை இன்று கொண்டு வர முயன்றார்.

* பெண் பாதிரியார்கள் முதல் முறையாக கலந்து கொண்டனர், பிரிட்டனின் பிற மத தலைவர்களும் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் அதன் செல்டிக் மொழிகளான வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக் மற்றும் ஐரிஷ் கேலிக் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன.

* கோர்ஃபு தீவில் பிறந்த மன்னர் சார்லஸின் மறைந்த தந்தை பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மன்னர் முடிசூட்டு விழாவில் முதன்முறையாக கிரேக்க பாடகர் குழு சங்கீதம் வாசித்தது.

* சார்லஸ் மன்னர் மட்டும் அல்ல,  சர்ச் ஆஃப் பிரிட்டனின் தலைவர் மற்றும் தன்னை ஒரு "இறையாண்மையின் ஆன்மீக நிலையை வலியுறுத்தும் கிறிஸ்தவ மத தலைவர்" என்று தெரிவித்தார். ஆனால் அவர் இரண்டாம் உலகப் போரின் நிழலில் அவரது தாயார் பெற்றதை விட மத ரீதியாகவும் இன ரீதியாகவும் வேறுபட்ட நாட்டிற்கு தலைமை தாங்குகிறார். எனவே, அவர் சபையை பிரிட்டன் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக மாற்ற முயன்றார், சாதாரண பொதுமக்களை அரச தலைவர்கள் மற்றும் உலகளாவிய அரச தலைவர்களுடன் அமர அழைத்தார்.

* முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, கேன்டர்பரி பேராயர் சிலுவை வடிவில் உள்ள அவரது உள்ளங்கைகளில் புனித எண்ணெயை அபிஷேகம் செய்தார். விழாக்களின் சடங்கு உடைகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன.

* இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டனின் பிரதமா் ரிஷி சுனக், மத நம்பிக்கைபடி இந்துவாக இருந்தாலும், பிரிட்டன் அரசின் முதல் தலைவர் என்ற முறையில் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பைபிள் வசித்தார். முடிசூட்டு விழாவை "நமது வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களின் பெருமையின் வெளிப்பாடு" என்று தெரிவித்தார்.

* முன்னதாக, பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூட்டிக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் வழி அருகே போராட்டம் நடத்திய முடியாட்சி எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments