உலகம்

ஜூனில் உளவு செயற்கைக்கோள்: வட கொரியா

DIN

தாங்கள் உருவாக்கியுள்ள உளவு செயற்கைக்கோளை முதல்முறையாக வரும் ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்தவுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
 இது குறித்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 வரும் ஜூன் மாதத்தில் எங்களது உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். அதன் பிறகு, அமெரிக்காவும், தென் கொரியாவும் அவ்வப்போது நடத்தி வரும் கண்மூடித்தனமான கூட்டு ராணுவப் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 முன்னதாக, வரும் 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT