காட்டுத்தீயை அணைக்க முயற்சிக்கும் ஹெலிகாப்டர் 
உலகம்

ஹவாய் தீவில் மற்றுமொரு காட்டுத் தீ!

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

DIN

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கோ குடியிருப்பு பகுதிகளிலோ பாதிப்பு ஏற்படவில்லை. 

கடந்த மாதம்தான், இந்த மழைக்காடுகளில் 99 பேரைப் பலியாக்கிய காட்டுத்தீ விபத்து நிகழ்ந்தது. 

ஓஹூ பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு இருக்கலாம். இதுவரை காட்டுத்தீ ஏற்படாத மழைக்காடுகள் கூட தீக்கு இரையாவது அபாயமான சூழலாகக் கருதப்படுகிறது. 

பசுமை செறிந்துள்ள ஓஹூ தேசிய சரணாலயம், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரிகள் என அமெரிக்கா அறிவித்திருந்த 22 உயிரினங்களுக்கான புகலிடமாக உள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட உயிரினங்களும் தாவரினங்களும் இந்தப் பகுதியில் மட்டும் காணக் கூடியவை.

இப்போது ஏற்பட்ட காட்டுத் தீயினால் என்னென்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளன என இன்னும் அறிய இயலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT