உலகம்

சோமாலியாவில் மழை வெள்ளம்! 31 பேர் பலி

DIN

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான வறட்சிக்குப் பெயர் பெற்ற சோமாலியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பெருமழை  காரணமாக நேரிட்ட வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபரில் தொடங்கிய இந்த மழை காரணமாக 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் செய்தியாளர்களுடன் பேசிய தகவல் துறை அமைச்சர் தாவூத் ஆவீஸ் தெரிவித்தார்.

தெற்கு சோமாலியாவில் கெடோ பகுதியில்தான் பெரும் பாதிப்பு நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் இத்தகைய பெரு மழை பெய்யும். இந்த மழை - வெள்ளத்தைச் சமாளிக்கத்தான் முடியுமேயொழிய தடுக்க முடியாது என்று  மனிதநேய உதவிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக சோமாலியாவுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 208 கோடி) இந்த அமைப்பு வழங்கியுள்ளது.

சோமாலியாவுக்கு அருகேயுள்ள கென்யா நாடும் கடும் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 உயிரிழந்ததாக கென்ய ரெட்கிராஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT