உலகம்

உக்ரைனில் கடும் பனிப்புயல்: 5 பேர் பலி, 19 பேர் காயம்!

உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். 

DIN

உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். 

சுமார் 21 மாதங்களுக்கும் மேலாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. 

இதனிடையே, திங்கள்கிழமை இரவு உக்ரைனில் கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பனிப்புயலால் 17 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

கிரிமியாவில் உள்ள பல நகராட்சிகளில் அவசரநிலை அமலில் உள்ளது. உக்ரைன் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT