உலகம்

அமெரிக்கா: சீன தூதரகத்தில் காரை மோதியவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவிலுள்ள சீன துணைத் தூதரகத்தில் காரை மோதியவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

DIN


சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவிலுள்ள சீன துணைத் தூதரகத்தில் காரை மோதியவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

அந்த நாட்டின் சான் ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரிலுள்ள சீன துணைத் தூதரகத்தின் மீது காரை மோதச் செய்த ஒருவா், நுழைவு இசைவு (விசா) அலுவலகத்தின் வாயில் கதவுகளை அந்தக் காரால் மோதி உடைத்து உள்ளே நுழைந்தாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. தகவலறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், காரை ஒட்டி வந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருந்தாலும் அப்போது ஒரு காவலா் சுட்டதில் அந்த நபா் காயமடைந்தாா். பின்னா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT