கோப்புப் படம். 
உலகம்

சோமாலியா: டிரக் குண்டு வெடித்ததில் 21 பேர் பலி

மத்திய சோமாலியாவில் சோதனைச் சாவடியில் நிகழ்த்தப்பட்ட டிரக் குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள்.  

DIN

மத்திய சோமாலியாவில் சோதனைச் சாவடியில் நிகழ்த்தப்பட்ட டிரக் குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள். 
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பில்டுவினில் உள்ள அரசு சோதனைச் சாவடியில் நேற்று டிரக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்து. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
அவர்களில் படுகாயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தலைநகர் மொகடிஷுவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் அமைப்பு, சோமாலியாவில் மத அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

திமுக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்: விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 12.09.25

இட்லி கடை: ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டர்!

காத்மாண்டு அருகே ஆந்திர பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

SCROLL FOR NEXT