உலகம்

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க கிரீஸ் முடிவு!

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

DIN

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய கிரீஸ் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கிரீஸின் எவியா தீவு மின்சாரமின்றி தவித்து வருகின்றது. சாலைகளை சீரமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக பேசிய கிரீஸ் நாட்டின் பிரதமர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்துக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும். பருவநிலை நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு நாம் திட்டங்களை வகுப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT