உலகம்

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க கிரீஸ் முடிவு!

DIN

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய கிரீஸ் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கிரீஸின் எவியா தீவு மின்சாரமின்றி தவித்து வருகின்றது. சாலைகளை சீரமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக பேசிய கிரீஸ் நாட்டின் பிரதமர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்துக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும். பருவநிலை நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு நாம் திட்டங்களை வகுப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT