10,000 பெண்கள் உயிரிழப்பு
நியூயாா்க்: காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மகளிா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்த பெண்களில் சுமாா் 6,000 போ் தாய்மாா்கள். அவா்களது மரணத்தால் 19,000 குழைந்தைகள் அநாதைகளாகியுள்ளனா். உயிா் தப்பியுள்ள பெண்களும் கணவா்களை இழந்து, இருப்பிடங்களைவிட்டு வெளியேறி, உணவின்றி தவித்து வருகின்றனா்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.