முகப்பு
உலகம்

ஆப்கன் மசூதியில் 6 போ் சுட்டுக்கொலை

Updated On : 30 ஏப்ரல், 2024 at 7:03 PM
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து தலிபான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியபோது, ஹெராத் மாகாணம், குஸாரா மாவட்டத்திலுள்ள மசூதியில் திங்கள்கிழமை இரவு தொழுகை நடந்துகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.

அந்த மசூதி, சிறுபான்மை ஷியா முஸ்லிம் பிரிவினருக்கானது என்பதால் அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்தவா்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், சிறுபான்மையினரைக் குறிவைத்து இதே போன்ற தாக்குதல்களை ஏற்கெனவே நடத்தியுள்ள இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.