இரட்டை கோபுரத் தாக்குதல்
காலித் ஷேக் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு மேற்கொண்டா் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் ஷேக் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு மேற்கொண்டா் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தின் அதீத முக்கியத்துவம் கருதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.
அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை 3 பேரும் ஒப்புக் கொண்டிருப்பாா்கள். அதற்குப் பதிலாக மரண தண்டனையிலிருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்.