முகப்பு
உலகம்

கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள்? மெக்சிகோவில் 13 குழந்தைகள் பலி

மெக்சிகோவில் 13 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காரணமா?

Updated On : 6 டிசம்பர், 2024 at 12:44 PM
13 குழந்தைகள் பலி
பகிர்:

மெக்ஸிகோ: 14 வயதுக்கு உள்பட்ட 13 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதுமிருக்கும் மருத்துவமனைகளுக்கு மெக்ஸிகோ சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இன்னமும் குழந்தைகளின் மரணத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் மரண அறிக்கையில், அனைத்து விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தகர்க்கும் க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா என்ற பாக்டீரியா காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இறந்த குழந்தைகள் அனைத்தும் ரத்த நாள தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், இதுவரை 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 13 குழந்தைகள் மரணமடைய, மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது

முழு கட்டுரையைப் படிக்க →