உலகம்

அதிபர் ராஜிநாமா சரியே: ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்

அதிபர் நோவாக் ராஜிநாமா: பிரதமர் ஆர்பன் ஆதரவு.

DIN

ஹங்கேரி அதிபர் கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று ஆற்றிய உரையில், ராஜிநாமா சரியானது. அது எங்களைப் பலப்படுத்துகிறது. அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு அனைவரின் சார்பாகவும் கனத்த இதயத்துடன் நன்றி கூறுகிறேன். இது ஹங்கேரிக்கு பெரும் இழப்பு. பெரும்பான்மையான ஹங்கேரியர்கள் அவரது பொது மன்னிப்பு முடிவை நிராகரித்தனர்.

நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஹங்கேரி அதிபராக பதவிவகித்த கட்டலின் நோவாக் பொது மன்னிப்பு வழங்கியது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து போராட்டங்கள் வெடித்த நிலையில் அவர் பதவி விலகும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். 46 வயதான கட்டலின் நோவாக், 2022 முதல் அதிபராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாறு தொகுதியில் கேள்விக்குறியாக 34,219 வாக்காளா்கள்

இலங்கை வெள்ளத்தில் 607 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!

இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: வருத்தம் தெரிவித்த சிஇஓ

மொபைல் போன் இறக்குமதி 0.02% ஆக சரிவு!

சேலையில் செதுக்கி... ஷ்ரத்தா ஸ்ரீீநாத்!

SCROLL FOR NEXT