காஸா: 29 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை
பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
காஸா சுகாதார அமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 103 பேரின் உடல், உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக தொடர்ந்துவரும் போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 29,195 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஹமாஸ் படைவீரர்கள், பொதுமக்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமைச்சகம் அளிக்கவில்லை.
69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேல் 10 ஆயிரம் பாலஸ்தீன பயங்கரவாதிகளைக் கொன்றதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
மேலும், பொதுமக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளைத் தாங்கள் தவிர்த்து வருவதாகவும், ஹமாஸ் மக்கள் திரள் அதிகமுள்ள பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அக்டோபர் போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 237 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.