தாக்குதல் நடந்த பகுதி
தாக்குதல் நடந்த பகுதி AP
உலகம்

மீண்டும் இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கிச்சூடு

DIN

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு இஸ்ரேலியர் பலியாகியுள்ளார். குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்.

அதிகாலை 7.30 மணிக்கு போக்குவரத்து குறைவாக இருக்கும்போது சோதனை தடுப்புக்கு அருகில் சென்ற கார்களை நோக்கி மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் மூவரில் இருவரை பாதுகாப்பு காவலர்கள் சுட்டு கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தப்பிச் சென்ற மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் அக்.7-ம் தேதி தொடங்கியது முதல் இரு தரப்புக்கும் மேற்கு கரை பகுதியில் மோதல் அவ்வவ்போது வெடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT