உலகம்

ஈரான் இரட்டை வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை உயர்வு!

DIN

ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. 

இந்தத் தாக்குதலில் காயப்பட்டிருந்த 8 வயது சிறுவன் மற்றும் 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நாட்டின் அவசர சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அதில் 11 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கில் 820 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தற்கொலைப் படையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் வெடிகுண்டு வெடித்த பின்னர், மீட்புப்பணிக்காக பணியாளர்களும் மக்களும் அங்கு கூட, 20 நிமிட இடைவெளியில் மற்றொரு குண்டும் வெடிக்கவைக்கப்பட்டு பெறும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 11 பேரை இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT