முகப்பு
உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: தூதுக்குழு அனுப்ப இஸ்ரேல் முடிவு!

போர் நிறுத்தம்: இஸ்ரேல் தூதுக்குழு அனுப்ப முடிவு!

Updated On : 4 ஜூலை, 2024 at 4:11 PM
மேற்குக் கரையில் பலியான 15 வயது சிறுவனுக்காக கண்ணீர் சிந்தும் உறவினர்கள்
பகிர்:

காஸா போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் சார்பில் தூதுக்குழு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையில் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பதிலை இஸ்ரேலுக்கு அளித்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எகிப்து அல்லது கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆரம்பகட்ட ஆலோசனைக்கு பிறகு பிரதமர் தூதுக்குழு அனுப்ப ஒத்துக்கொண்டதாக அதிகாரிகள் - பெயர் வெளியிடாதவாறு கேட்டுக்கொண்டு - தெரிவித்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இஸ்ரேலின் இலக்குகள் எட்டப்பட்ட பிறகே போர் நிறுத்தம் நடக்கும் என இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்துவருகிறது.

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதுமுதல் ஹமாஸின் தரப்பில் சாதகமான பதில் பெறப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் பேசியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களின் மீதான வன்முறையை நிறுத்த சில யோசனைகளை மத்தியஸ்தம் மேற்கொள்ளும் சகோதர நாடுகளுக்கு தெரிவித்ததாக ஹமாஸ் புதன்கிழமை கூறியது.

9 மாதங்களாக தொடரும் போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தை பதற்றமான சூழலில் இருந்து சிறிது ஆறுதல் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →