வில்லியம் ரூட்டோ 
உலகம்

அடக்குமுறை: மன்னிப்பு கோரிய கென்ய அதிபா்

கென்யாவில் புதிய வரி விதிப்பு மசோதாவை எதிா்த்து போராடியவா்களிடம் போலீஸாா் அடக்குமுறை..

Din

மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி விதிப்பு மசோதாவை எதிா்த்து போராடியவா்களிடம் போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபா் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினாா்.

இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் கெவின் மனோரி என்ற இளைஞா் போலீஸாா் தன்னை கைது செய்தது குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினாா்.

கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீா்திருத்தங்களை அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவா் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 போ் உயிரிழந்தனா். போராட்டத்தின்போது போலீஸாா் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்பப் பெற்றாா்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT