முகப்பு
உலகம்

உலகில் முதல் முறை: சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!

வலிப்பு நோய் பாதித்த சிறுவனின் மூளையில் நோய் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு சோதனை

Updated On : 25 ஜூன் 2024, 1:13 pm IST
சிறுவன் ஓரன் - டிடி நியூஸ்
பகிர்:

உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தபப்ட்டுள்ளது.

ஓரன் நால்சன் என்ற சிறுவனுக்கு வலிப்பு நோயின் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், ஒரு நாளில் நூற்றுக்கணக்கான முறை வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுவந்தார். அவரது மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுக் கருவி, மூளைக்கு எலக்ட்ரிக்கல் சமிக்ஞைகளைக் கொடுத்து ஒரு நாளில் ஏற்படும் வலிப்பு எண்ணிக்கையை 80 சதவீதம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் மூளையில் இந்தக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட பிறகு அவன் இயல்பாக இருப்பதாகவும், முன்பை விட சுட்டியாக மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். குதிரை ஏற்றம், விளையாட்டு என அவனது வாழ்க்கை மாறியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement

ஓரன், சேமர்செட் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன். லண்டன் கல்லூரி பல்கலை, கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆகியவற்றின் கூட்டணியில் கடந்த அக்டோபரில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுவனுக்கு 3 வயதிலிருந்தே வலிப்பு நோய் இருந்துள்ளது. இது அவன் வளர வளர தீவிரமடைந்துள்ளது.

இந்த அறுவைசிகிச்சைக்கு முன், சிறுவனுக்கு ஒரு நாள் கூட வலிப்பு ஏற்படாமல் இருந்ததில்லை என்றும் ஒரு சில நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வலிப்பு ஏற்படும் என்றும் சில வேளைகளில் அவன் நினைவிழந்து மூச்சு விடுவது நின்றும் கூட போயிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அவன் தீவிர வலிப்பினால் எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தழுவலாம் என்ற நிலையில், குடும்பத்தினரால் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருந்த நிலையில்தான் இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3.5 செ.மீ. சதுரத்தில் 0.6 செ.மீ. தடிமன் கொண்ட கட்டுப்பாட்டுக் கருவி, ஓரனின் மண்டை ஓடு அதற்கேற்ப வெட்டி எடுக்கப்பட்டு அதற்குள் வைத்து மண்டை ஓட்டுடன் ஸ்குரூ போட்டு இணைக்கப்பட்டுள்ளது. தலையில் மாட்டும் ஹெட்போன் போன்ற கருவி மூலம், இந்த கட்டுப்பாட்டுக் கருவிக்கு சார்ஜ் போடப்படுகிறது.

அறுவை சிகிச்சையிலிருந்து சிறுவன் உடல்நலம் தேறிய பிறகே, இந்த கருவி இயக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், சிறுவனின் மூளைக்கு மிக லேசான எலக்ட்ரிக்கல் தூண்டுதல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும், இதனால், வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனால், சிறுவன் தற்போது நல்ல உடல்நலத்துடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments