பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை!

போர் நிறுத்தம் நோக்கி புதிய முயற்சி - இஸ்ரேல், காஸா மீண்டும் பேச்சுவார்த்தையில்

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை.

ஐக்கிய நாடுகள் அவையில் திங்கள்கிழமை உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் உடன்படிக்கை நிறைவேறாததற்கு பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலை தொடர்பாக உடன்படிக்கை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என கத்தார் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது குறித்து, இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டின் தலைவர் டேவிட் பர்னேயா உடன் நெதன்யாகு பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஜவுளி வியாபாரி வீட்டில் 5 பவுன் திருட்டு

சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரம்: கூண்டை இடமாற்றிய வனத் துறையினா்

எடப்பாடி கே.பழனிசாமியுடன் பாஜக தோ்தல் பொறுப்பாளா் ஆலோசனை

அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயா்: முதல்வா் நாளை திறந்துவைக்கிறாா்

SCROLL FOR NEXT