முகப்பு
உலகம்

ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்: ஐநா கவலை!

ராஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த 80 ஆயிரம் பேர்!

Updated On : 9 மே, 2024 at 4:16 PM
ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள் - AFP
பகிர்:

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் தெற்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை விரிவிப்படுத்தியுள்ளதால் அங்குள்ள மக்களை இடம்பெயரச் சொல்லி அறிவுறுத்தியது.

ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள் - AFP

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கிய மே 6-ம் தேதி முதல் 80 ஆயிரம் பேர் ராஃபாவில் இருந்து, வேறு புகலிடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

ராஃபாவிலிருந்து வெளியேறும் மக்கள் - AFP

இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை எனவும் முகமை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.